விடுதலை சிறுத்தைகள் கட்சி போஸ்டரால் கோவையில் பரபரப்பு

Spread the love

 

 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சி போஸ்டரால் கோவையில் பரபரப்பு

கோவை செப் 18,கோவை அவிநாசி சாலை தண்டு மாரியம்மன் கோவில் எதிரில் கோவை மாநகர் மாவட்ட தொண்டரணி துணை செயலாளர் கொங்கு சம்பத் ஒரு ராட்சத அளவிளான மிக பெரிய போஸ்டர் ஒன்றை ஒட்டி உள்ளார். அந்த போஸ்டரில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. இது ஆளும் திமுக-வினரின் கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆகவே கோவையில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இதுகுறித்து கொங்கு சம்பத் கூறுகையில்:

 

எழுச்சி தமிழர் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் கோவையில் தான் முதலில் பணியாற்றினார். இன்று தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் திகழ்கின்றார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்கள் எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன் அவர்களை முதலமைச்சர் அரியணையில் அமர்த்த பாடுபடுவோம். தேர்தல் சமயத்தில் ஆட்சியிலும் பங்கு,அதிகாரத்திலும் பங்கு என எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன் அறிவித்து உள்ளது எங்களை போன்ற தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சமூகநீதி நாளில் தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்திய- 66-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் முனியம்மாள் பாலமுருகன்.
Next post பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் பேங்கிங்யை கற்பிக்கும் எச்டிஎஃப்சி வங்கி