கோவை,சூலூரில் தேசிய மாணவர் படை சிறப்பு முகாம்

Spread the love

கோவை,சூலூரில் தேசிய மாணவர் படை சிறப்பு முகாம்

 

கோவை அக் 7,

கோவை சூலூர் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு பட்டாலியன் (கோவை4) சார்பாக தேசிய மாணவர் படை சிறப்பு முகாம் செப் 29 முதல் நடைபெற்று வருகின்றனது . இந்த சிறப்பு முகாம், கோவை மண்டல என்.சி.சியின் குடியரசு தின அணிவகுப்புக்கான தேர்ச்சி முகாம் என இரு பிரிவுகளாக நடைபெறுகிறது முகாமிற்கு லெப்டினன்ட் கர்னல் ஒய்னம் கமான்டிங் அதிகாரியாக உள்ளார். பத்து நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் தமிழ்நாடு பட்டாலியனின் பயிற்சியில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த தேசிய மாணவர் படை மாணவர்களும் பங்கேற்றனர், நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் அனிர்பன் பெளமிக் , பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த தேசிய மாணவர்படை அலுவலர்களும், சுபேதார் மேஜர் பாண்டியன் தலைமையிலான இராணுவத்தினரும் சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர்.

 

 

இதில் கோவை, பொள்ளாச்சி, உடுமலை, ஊட்டி, சேலம், நாமக்கல், திருச்சங்கோடு, தர்மபுரி பகுதிகளைச் சார்ந்த பல்வேறு பள்ளி, கல்லூரிகளின் தேசிய மாணவர் படை மாணவ,மாணவியரும் பங்கேற்றுள்ளனர். முகாம் பயிற்சியில் குடியரசு தின முகாமிற்கான சிறந்த மாணவர் தேர்வு, கலைநிகழ்ச்சிகள், என்.சி.சி. வகுப்புகள், துப்பாக்கி சுடுதல், ஆயுதப் பயிற்சிகள், அணிவகுப்பு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முகாமிற்கு ஆர்.வி.எஸ். கல்லூரி தேசிய மாணவர்ப் படை அலுவலர் கேப்டன் டாக்டர் தீபக் ரிஷாந்த் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சட்டம் அனைவருக்கும் சமம் பீம்ராவ் சட்ட உதவி மையம் கோவையில் துவக்கம்- உயர்நீதிமன்ற நீதிபதி சாமிநாதன் பங்கேற்பு 
Next post தனியார் கல்லூரி கட்டிட அனுமதியில் குளறுபடி விதிமுறலை ரத்து செய்ய கோவை கலெக்டரிடம் மனு