தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்கத்தின் 5-ம் ஆண்டு விழா – சிறப்பு விருந்தினராக நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பங்கேற்பு

Spread the love

தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்கத்தின் 5-ம் ஆண்டு விழா – சிறப்பு விருந்தினராக நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பங்கேற்பு

 

கோவை அக்-8,

தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா சென்னை அயப்பாக்கத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர் சங்கத்தின் மாநில தலைவர் முனைவர் அயன்புரம் பாபு தலைமையிலும், மாநில பொதுச் செயலாளர் RTI தேவேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.மாநில பொருளாளர் வழக்கறிஞர் கோகிலா முன்னிலை வகித்தார்.

 

சிறப்பு அழைப்பாளராக நக்கீரன் ஆசிரியர்,நிறுவனர் நக்கீரன் கோபால், தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க தலைவர் எஸ்.சரவணன், அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி, கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் கருணாநிதி, தமிழ்நாடு சிறு பத்திரிக்கையாளர் நல சங்க தலைவர் குரு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் தளபதி பாஸ்கர், வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் ராஜீவ் காந்தி, மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா ஜெய்சங்கர், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சுரேஷ் பெரியசாமி, தொழிற்சங்க செயலாளர் ஜாபர் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

 

தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவின் முக்கிய நிகழ்வாக நக்கீரன் ஆசிரியர்,நிறுவனர் கோபால் சிறப்புரையாற்றி மூன்று மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டிகளை வழங்கினார்.

 

இந்நிகழ்வில் தமிழ்நாடு முழுவதும் இருந்து மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவில் சிறப்பு செய்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தனியார் கல்லூரி கட்டிட அனுமதியில் குளறுபடி விதிமுறலை ரத்து செய்ய கோவை கலெக்டரிடம் மனு
Next post 2026 சட்டமன்ற பணியை துவங்கிய திமுக :234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்கள் நியமனம்…