வாணியம்பாடி அருகே மின்னல் தாக்கியதில் பட்டதாரி இளைஞர் உயிர் இழந்தார்.

Spread the love

வாணியம்பாடி அருகே மின்னல் தாக்கியதில் பட்டதாரி இளைஞர் உயிர் இழந்தார்.

திருப்பத்தூர் அக் 10,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் சாமுடி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி இவரது மகன் மகாலிங்கம் (28) பட்டதாரியான இவர் தன் தாய் தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து கொண்டும் கோழி பண்ணையை பராமரித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாலை திடீரென மழை பெய்துள்ளது அப்போது மழைக்காக கோழி பண்ணை அருகே உள்ள ஒரு மரத்தடியில் நின்றிருந்தார் அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரது பெற்றோர் அந்த இளைஞரை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய வருகின்றனர்.

மின்னல் தாக்கியதில் பட்டதாரி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post நெய்வேலியில் வாலிபர் கொலை வழக்கில் இரண்டு பேரை கைது செய்தது நெய்வேலி தெர்மல் போலீஸ்
Next post ஆப்பிள் வியாபாரி வைத்து இருந்த பணம் திருடி சென்ற நபரை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் குற்றவாளியை கைது செய்த காவல்துறை