பாஜகவுக்கு – திமுக ஆதரவு அளிக்கும் சீமான் ஆருடன்

Spread the love
நிதீஷ் குமாரும் சந்திரபாபு நாயிடும் பாஜக ஆதர வை விட்டு விலகினால் திமுக 22 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நிச்சயம் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும், புதுக்கோட்டையில் சீமான் பேட்டி,
 
புதுக்கோட்டை;செப்.19:
 
நிதீஷ் குமாரும் சந்திரபாபு நாயிடும் பாஜக ஆதர வை விட்டு விலகினால் திமுக 22 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நிச்சயம் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும்,2026லும் தனித்து தான் போட்டி, விஜய் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு எந்த பாதிப் பும் இல்லை எங்களால் தான் மற்றவர்களுக்கு பாதிப்பு, 
 
தேசிய இனத்திற்கு தலைமை ஏற்று இருக்க வே ண்டும் என்றால் திரைத்துறை மட்டும் பற்றாது, துணிவு வேண்டும், நமது வரலாறு மொழி உள்ளி ட்டவற்றை கற்றுக்கொண்டு விஜய் வரவேண்டும் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது,
 
 கட்சியிலிருந்து அவர்களாக போகிறார்கள் அவர் களை நாங்கள் நீக்கல் கடிதம் கொடுத்து நீக்கவில் லை, அவர்கள் குற்றச்சாட்டை மட்டும் தான் வைக்கி றார்கள், பட்டுபோன சறுகு கீழ விழுந்தால் சத்தம் கேட்க தான் செய்யும் அதை பொருட்படுத்த வேண் டாம்‌.
 
 புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் தலை மை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.

 
புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில் உள்ள தனி யார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் அக்கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த கூட்டத்தில் பங்கே ற்க உள்ள அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப் பினர்களுக்கு அரங்கினுள் செல்போன் பயன்படு த்த தடை விதிக்கப்பட்டு அரங்கினுள் செல்பவர் களிடம் செல்போனை பெற்றுக் கொண்டு டோக்க ன் வழங்கப்பட்டது.
 
இந்நிலையில் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த சீமான் இரட்டைமலை சீனிவாசன் நினைவை போற்றி வகையில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். 
 
இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் கூறுகையில்:
 
திமுக 100 ஆண்டு ஆட்சியில் இருக்கும் தமிழ்நாடு இருக்குமா? மாநில சுய ஆட்சி என்று வெற்று வாற் றைய தவிர வேறு எதையை வைக்கவில்லை, வச னத்தையும் திரைக்கதையையும் மாற்ற வேண்டும்.
 
விஜய் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் மாலை போட்டதை வரவேற்கிறேன் அதேபோல் முத்துராம லிங்க தேவர் இரட்டை மலை சீனிவாசன் வேலுநா ச்சியார் திருவிக உள்ளிட்டோருக்கும் தொடர்ந்து மாலை அணிவிக்க வேண்டும், பெத்தவன் ஒருத்த னாக இருக்க வேண்டும், தலைவன் எங்கள் இரத்ததில் இருக்க வேண்டும்.
 
என்னுடன் கூட்டணிக்குயாரும் வருவார் போவார் என்று நான் எதிர்பாரக்கவில்லை, விஜய் வந்த பிற கு தான் அவர் கொள்கை என்ன சொல்கிறார் என் று பார்க்க வேண்டும். நான் தமிழ் தேசிய தத்துவத் தில் உள்ளேன் ,
 
பெரியரை தமிழ் தேசியத்தின் எதிராயாக நான் பா ர்க்கலை , ஆனால் பெரியார் மட்டும் தான் எல்லாம் செய்தார் என்பதை ஏற்க முடியாது ,பெரியாரும் போராடினர் என்பது தான் என் கருத்து ஆனால் இங்கு பெரியார் தான் எல்லாம் என்று சொல்வதை நான் ஏற்கவில்லை.ஒற்றைக் கட்சி ஆட்சி முறை என்பதுதான் கொடிய சனாதனம். 
 
கட்சியிலிருந்து அவர்களாக போகிறார்கள் அவர்களை நாங்கள் நீக்கல் கடிதம் கொடுத்து நீக்கவில்லை, அவர்கள் குற்றச்சாட்டை மட்டும் தான் வைக்கிறார்கள், பட்டுபோன சறுகு கீழ விழுந்தால் சத்தம் கேட்க தான் செய்யும் அதை பொருட்படுத்த வேண்டாம்‌.
 
தேசிய இனத்திற்கு தலைமை ஏற்று இருக்க வேண்டும் என்றால் திரைத்துறை மட்டும் பற்றாது, துணிவு வேண்டும், நமது வரலாறு மொழி உள்ளிட்டவற்றை கற்றுக்கொண்டு விஜய் வரவேண்டும் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது, விஜய் செய்தியாளர்களை சந்திக்கும் போது தனித்து நிற்பாரா அல்லது சீமானோடு கூட்டணி வைப்பாரா என்று கேட்க வேண்டும்.
 
நிதீஷ் குமாரும் சந்திரபாபு நாயிடும் பாஜக ஆதரவை விட்டு விலகினால் திமுக 22 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நிச்சயம் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும்.
 
உதயநிதி துணை முதலமைச்சர் ஆகி என்ன செய்யப் போகிறார் அவருக்கு பசி என்றால் என்ன என்று தெரியுமா ஒரே உடையை ஒரு வாரம் உடுத்தி பள்ளிக்கு சென்று இருப்பாரா, உணவு கிடைக்காமல் பழைய சோறு கொண்டு இருப்பாரா? உதயநிதி நடத்திய கால்பந்தயத்தில் உள்ளூர் நபர்கள் யாரேனும் பங்கேற்று வெற்றி பெற்றார்களா ஒரு மாற்றுத்திறனாளிதான் தங்கப் பதக்கத்தை வென்று நமக்கு பெருமை சேர்க்க வேண்டியது. பானை ஒன்றுதான் ஆனால் வெளியே உள்ள தோற்றமும் உள்ளே உள்ள தோற்றமும் வேறு வேறு நாங்கள் உள்ளே உள்ள தோற்றத்திற்காக பேசக்கூடியவர்கள்.
 
விடுதலை சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஆர் எஸ் பாரதியையும் டி கே எஸ் இளங்கோவனையும் அனுப்புவதற்கு பதிலாக டி ஆர் பாலுவையும் ஜெகனையும் தான் அனுப்ப வேண்டும். மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்றால் அவர்கள் அங்கு போய் என்ன பேசுவார்கள் மதுவை ஒழிக்க வேண்டும் என்றா பேசுவார்கள்.
 
ஆட்சியில் பங்கு தர முடியாது என்று சொல்லும் கட்சிகள் தனித்து நின்று தேர்தலில் சந்தித்து வெற்றி பெற வேண்டும்.
 
 2026லும் தனித்து தான் போட்டி. விஜய் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எங்களால் தான் மற்றவர்களுக்கு பாதிப்பு என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் பேங்கிங்யை கற்பிக்கும் எச்டிஎஃப்சி வங்கி     
Next post புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளை மோ திய தனியார் பஸ் முற்றுகை.