கோவை மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி.

Spread the love

கோவை மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி.

 

 

கோவை நவம்பர் 24-

 

 

கோவை சுந்தராபுரம் குறிச்சி ஆண்டாள் தோட்டத்தை சேர்ந்தவர் மனோவா. ஆட்டோ டிரைவர். இவரது மகன் பிரனேஷ் (வயது 12). இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

 

 

 

ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுவனின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அப்போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது.

 

 

 

 

இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரனேஷ் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post அன்னூர் அருகே 17 வயது சிறுமி கர்ப்பம் காரணமான வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.
Next post கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் மீது மேலும் ஒரு வழக்கு.