நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலப்படமாக இருந்ததால் பரபரப்பு.

Spread the love
புதுக்கோட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலப்படமாக இருந்தால் பரபரப்பு.
 
புதுக்கோட்டை,ஏப்.27:
 
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே 30க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்களைச் சேர் ந்த மக்களுக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சுமா ர் 10 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும் குடிநீர் வி னியோகம் செய்யப்படும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலந்திருப்பதாக பட்டிய ல் சமூக மக்கள் குற்றம் சாட்டு  வைத்ததால் பரபரப் பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்நிலையில் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியிலிருந்து தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பி மாட்டு சாணம் கலக்கப்பட்டது உறுதியானால் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியாக சொல்லியு ள்ளார்.
 
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள சங்கம்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட குருவா ண்டான்தெரு பகுதியில் 30க்கும் மேற்பட்ட பட்டிய லின மக்களும் 270 மாற்று சமூகத்தை சேர்ந்தவர்க ளும் வசித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குடு ம்பத்தினருக்கும் அதேபோல் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சுமார் பத்து குடும்பங்களை சேர்ந்தவர்க ளுக்கும் குடி தண்ணீர் வினியோகம் செய்யும்  பத் தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது.
 
இந்நிலையில் அந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி யிலிருந்து வரும் நீரைத்தான் பட்டியல் சமூக மக்க ளும் அதே போல் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சுமா ர் பத்து குடும்பங்களை சேர்ந்தவர்களும் பயன்படு த்தி வந்துள்ளனர்.
 
இந்நிலையில் இந்த தொட்டியிலிருந்து வரும் த ண்ணீரை குடித்ததால் பட்டியல் சமூகத்தைச் சேர்ந் த குழந்தைகள் உள்ளிட்ட சிலருக்கு கடந்த மூன்று தினங்களாக வயிறு வலி வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச் சை பெற்று பின்னர் வீடு திரும்பியதாக கூறப்படு கிறது. 
 
இந்நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏறிப் பார்த்தபோது அதில் மாட்டு சானம் இருந்ததாக கூ றப்படுகிறது.
 
இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் இதுகுறித்து கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
 
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள்
மாட்டு சாணம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப் பதுடன் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை தூய்மைப்படுத்தி தர வேண்டும்.
 
அதேபோல் தங்கள் பகுதியில் மருத்துவ முகாம் ந டத்த வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பட்டி யல் சமூக மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
இந்நிலையில் கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி தண்ணீரில் மாட்டு சாணம் கலந்தது உறுதியா னால் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொ ட்டியை தூய்மைப்படுத்தப்படும் என்று உறுதியளித் து சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை யும் தூய்மைப்படுத்தப்பட்டது.
 
மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியிலிருந்து பட்டியல் சமூக மக்களுக்கும் அதேபோல் மாற்று சமூகத்தை ச் சேர்ந்த சுமார் 10 குடும்பங்களுக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில் பட்டியல் சமூக மக்களுக்கு மட்டும்தான் பாதிப்பு இருப்பதாக கூறுகின்றனர்.
 
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தவறும் நட ந்திருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சூரியனில் இருந்து தப்பிக்கவும் துபாயில் கோடைகாலத்திற்கான சிறந்த உட்புற சாகசங்கள்
Next post கோவில்பட்டியில்பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்