மது குடித்த இளம் பெண் கணவருக்கு தெரியாமல் இருக்க பெட்ரோலை குடித்து மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சிகிச்சை.

Spread the love

மது குடித்த இளம் பெண் கணவருக்கு தெரியாமல் இருக்க பெட்ரோலை குடித்து மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சிகிச்சை.

கோவை நவம்பர் 29-

கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த 24 வயது இளம்பெண். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நேற்று வீட்டில் இருந்த இளம்பெண் பீர் வாங்கி குடித்தார். அப்போது இளம் பெண்ணிடம் இருந்து மது வாசனை வந்தது. தான் மது குடித்ததை கணவர் கண்டுபிடித்து விடுவார் என்ற பயத்தில் இருந்த இளம் பெண் அவரது கணவர் மோட்டார் சைக்கிளில் ஊற்றுவதற்காக வைத்திருந்த பெட்ரோலை எடுத்து குடித்தார்.

சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கினார். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக இளம் பெண்ணை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு

டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post லிப்டின் சிக்கிக்கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் பரபரப்பு.
Next post மது குடிக்க பணம் தராத மனைவி மிரட்டுவதற்காக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப் போவதாக நாடகம் ஆடியவர் தீயில் கருகி சாவு