பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது.

Spread the love

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது.

 

 

கோவை டிசம்பர் 2-

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதை பொருட்களை விற்பனை செய்வோர்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

 

 

 

அதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் KNG புதூர் பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அப்துல் ஹக்கீம் என்பவரது மகன் டில்தார் ஹுசைன்-(26) என்பவரை கைது செய்தனர்.

 

 

 

 

அவர் விற்பனைக்கு வைத்திருந்த 3 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது.

இது போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான* நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

 

இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் 94981-81212* மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100* என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவைக்கு 120 புதிய பஸ்கள் வருகை.
Next post வீடு புகுந்து முதியவரை தாக்கி நகைகளை பறித்து சென்ற 2 பெண்களை கைது.