புதுக்கோட்டை அருகே அரசு பள்ளியில் உலக மரபு வார விழா

Spread the love

புதுக்கோட்டை அருகே அரசு பள்ளியில் உலக மரபு வார விழா

 

புதுக்கோட்டை நவ.25.

 

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக மரபு வார விழா நிகழ்வு. பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது பழமை யான தமிழி எழுத்துக்களை எழுதிகாட்டிய ஆறாம் வகுப்பு மாணவர்க ள் – உலக மரபு வார விழா நிகழ்வில் மாணவர்களுக்கு பாராட்டு தெரி விக்கப்பட்டது

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டது.நிகழ்விற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பழனிவேல் தலைமை வகித்தார்.

 

தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்று பேசினார். உதவித்தலைமை ஆசிரியர் குமரவேல், பள்ளி ஆசிரியர்கள் ஆண்டிவேல், அனந்தநாயகி,.பாத்தி மா, அருந்தேவி, மதிவாணன், சரவணன் ஆகியோர் தமிழர்களின் தொன்மை வரலாறு குறித்தும் அதனை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து பேசினர்.

 

தலைமையேற்று பேசிய பள்ளித்தலைமை ஆசிரியர் பழனிவேல் பழமையான தமிழி எழுத்துக்களை எழுதியும் வாசித்தும் காட்டிய ணவர்களை பாராட்டினார்.

 

வருங்காலத்தில் உயர் பணிகளுக்கு செல்வதற்கு இந்த பயிற்சி மி குந்த பயனாய் அமையும் என்றார். அனைவரும் அறிந்திராத தமிழி எழுத்துக்களை மாணவர்கள் எழுதி வாசிப்பதற்கு பயிற்சியளித்த தொன்மை பாதுகாப்பு மன்றத்திற்கு எனது பாராட்டுக்களை தெரிவி த்துக்கொண்டனர்.

 

உலக மரபு வார விழா குறித்து தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கி ணைப்பாளர் மணிகண்டன் பேசியதாவது, உலகம் முழுவதுமுள்ள ப ல் வேறுபட்ட மனித வர்க்க பரவலில் தனிப்பட்ட வாழ்வியல் பண் பாட் டு கூறுகள்,

 

அடையாளங்கள், மொழி , கலை வடிவங்கள், உணவு முறைகள், வாழ் விடங்கள் என வேறுபாடுகள் இருப்பதையும், அவற்றை அழியாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதே உலக மரபு வார விழாவின் தலையாய நோக்கமாகும், இப்பணியை இளைய சமு மு கத்தினருக்கு கடத்தும் நோக்கத்துடனேயே இதுபோன்ற பயிற்சி கள் , விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

 

நமது பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழி ம ற்றும் முற்கால தமிழ் எழுத்து வடிவங்களை அறிமுகம் செய்து வாசி ப்பதற்கான பயிற்சி அளித்து வருகிறோம், பயிற்சியின் நிறைவி |ல் அனைவரும் கல்வெட்டு எழுத்துக்களை வாசிக்க இயலும் என்றார்.

தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர் முகமதுஆசிப் நன்றி கூறினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post *ஆக்கிரமிப்பு அகற்றியதால் வீடு இழந்த குடும்பங்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை அதிகாரிகள் ஆய்வு*
Next post குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் சார்பில் பள்ளி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது