கிரிக்கெட் விளையாடியதை பெற்றோர்கள் கண்டித்ததால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை

Spread the love

கிரிக்கெட் விளையாடியதை பெற்றோர்கள் கண்டித்ததால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை

கோவை அக்டோபர் 3-

பொள்ளாச்சி அருகே கிரிக்கெட் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கரையான் செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் முருகேஷ்(20). இவர் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பெற்றோர் அவரை கண்டித்து, வேலைக்கு செல்லும்படி அறிவுரை கூறி உள்ளனர். இதனால், முருகேஷ் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய பெற்றோர், முருகேஷ் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று முருகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில், கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெற்றோர் கிரிக்கெட் விளையாடக்கூடாது என கண்டித்ததால்

இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் செங்கனூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஐங்கமையனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முன்பு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மணி தலைமை தாங்கினார். செங்கனூர் ஊராட்சியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் பற்றியும் முக்கியமான கோப்புகள் சரி பார்க்கப்பட்டது.மது மற்றும் போதை பொருட்கள் இல்லாத ஊராட்சியாக இருக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.பருவ மழையினை எதிர் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நிகழ்வில் சின்னபள்ளத்தூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் கூத்தப்பாடி மா.பழனி , ஊராட்சி மன்ற துணை தலைவர் அண்ணா நரசிம்மன் ,ஒன்றிய கவுன்சிலர் குமரேசன் ,வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற எழுத்தாளர் ரங்கநாதன் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next post ஏஷியன் பெயிண்ட்ஸ் புதிய பிரச்சாரத்தை துவக்குகிறது