கோவையில் ரயில் மோதி அடையாளம் தெரியாத ரெண்டு பேர் பலி.

Spread the love

கோவையில் ரயில் மோதி அடையாளம் தெரியாத ரெண்டு பேர் பலி.

கோவை அக்டோபர் 5-

கோவை சிங்காநல்லூர் ரெயில்வே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ெரயில் மோதி இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோன்று வடகோவை-பீளமேடு ரெயில்வே தண்டவாளம் டெக்ஸ்டூல் பாலம் அருகே 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்தும் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு இறந்து கிடந்த ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவையில் வெவ்வேறு இடங்களில் ரெயில் மோதி இறந்து கிடந்த ஆண்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. அவர்கள் ரெயில் தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி அடிபட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் வேலூர் இப்ராஹிம் பேச்சு,
Next post தீபாவளி பண்டிகையை ஒட்டி கோவையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்.