கோவை மாநகராட்சி ஒரே நாளில் ரூபாய் 3.12 கோடி வரி வசூல் செய்து சாதனை

Spread the love

கோவை மாநகராட்சி ஒரே நாளில் ரூபாய் 3.12 கோடி வரி வசூல் செய்து சாதனை

கோவை அக்டோபர் 5-

கோவை மாநகராட்சி நேற்று ஒரே நாளில், 3.12 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதில், சொத்து வரியாக மட்டும் ரூ.2.27 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

கோவை மாநகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் பிரதான வருவாய். ஆறு மாதத்துக்கு ஒரு முறை என இரு தவணைகளாக வசூலிக்கப்படும்.இரண்டாவது தவணை காலம், அக்., 1ல் துவங்கி இருக்கிறது.

அதனால், வரியினங்களை வசூலிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. நேற்று ஒரே நாளில், சொத்து வரியாக, ரூ.2.27 கோடி, காலியிட வரி ரூ.2.73 லட்சம், குப்பை வரி ரூ.2.93 லட்சம், குடிநீர் கட்டணம் ரூ.9.91 லட்சம், தொழில் வரி ரூ.21.20 லட்சம்,

வரியில்லாத இனங்களாக ரூ.8.13 லட்சம் என மொத்தம் ரூ.3.12 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post இயற்கை உரம், பூச்சி விரட்டி தயாரிக்க வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு,
Next post துப்பாக்கியுடன் வனப்பகுதியில் மூவர் உலா – வனத்துறையினர் அதிரடி