தென் மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று கோவை மாணவர் அசத்தல். தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தேர்வு.

Spread the love

தென் மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று கோவை மாணவர் அசத்தல். தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தேர்வு.

கோவை அக்டோபர் 5-

தென் மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கோவையைச் சேர்ந்த மாணவர் தங்கம் வென்று அசத்தி தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

இதன் விவரம் வருமாறு:-

தென்மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில், கோவையை சேர்ந்த அக்சயரோஷன் தலா ஒரு தங்கம், வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

நேஷனல் ரைபிள் அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு ரைபிள் அசோசியேஷன் இணைந்து, 13வது தென்மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி, திருச்சியில் நடந்தது.

இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.இப்போட்டியில், கோவையை சேர்ந்த அக்சயரோஷன், ஜூனியர்களுக்கான 50மீ., ரைபிள் பிரிவில் தங்க பதக்கமும்,

சீனியர் பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்று அசத்தினார். இந்த வெற்றியின் வாயிலாக, தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தேர்வானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post காளையனூர் அருகே சிறுத்தை அட்டகாசம் 2 ஆடுகளை கடித்து குதறியது
Next post புகையிலை தடுப்பு பொது இடங்களில் புகைபிடித்தல் அபராத வசூலில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்.