தெலுங்கானா மற்றும் தமிழக மாநிலங்களை தொழில் மேம்பாட்டில் இணைக்க கோவையை சேர்ந்த இளைஞரின் புதிய முயற்சி…

Spread the love

தெலுங்கானா மற்றும் தமிழக மாநிலங்களை தொழில் மேம்பாட்டில் இணைக்க கோவையை சேர்ந்த இளைஞரின் புதிய முயற்சி…

தமிழகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோர்கள்,மற்றும் சுய தொழில் ஆர்வலர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோரை இணைத்து ஸ்டார்ட் பயணமாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் பற்றி தெரிந்து கொள்ள ஸ்டார்ட் பயணம் செல்லும் கோவையை சேர்ந்த இளைஞரின் புதிய முயற்சி….

18 நாடுகளில் ஐம்பாதயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களை கொண்டு ஓர் தொழில் கூட்டமைப்பாக ஸ்டார்ட் அப் பயணம் செயல்பட்டு வருகிறது..கல்லூரி மாணவ,மாணவிகளின் புதிய முயற்சியை தொழில் நிறுவனமாக மாற்றி இதில் இளம் தொழில் முனைவோர்களாக உருவாக்கி வரும் இதில்,. கோவையை அடுத்த பொள்ளாச்சியை சேர்ந்த இளைஞர் நவீன் கிருஷ்ணா, ஸ்டார்ட் அப் பயணம் வாயிலாக 9 edition நடத்தி , 97 தொழில் முனைவோர்களை உருவாக்கியுள்ளார்., 237 மாணவர் தொழில் முனைவோர்களை உருவாக்கியுள்ள,இவர், தற்போது. புதிய முயற்சியாக,இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முன்னோடி மாநிலமான தெலுங்கானாவிற்கு தமிழகத்தை சேர்ந்த இளம் தொழில் முனைவார்களை அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், ஸ்டார்ட் அப் டி பயணம் (Startup-T-Payanam) என தெலுங்கானாவிற்கு செல்லும் இந்த குழுவில் பெண்களும் இடம் பெற்றுள்ளதாகவும்,. தெலுங்கானாவிற்கு சென்று அங்கு ஒரு 50க்கும் மேற்பட்ட முதன்மை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து அங்குள்ள புதிய தொழில் யுக்திகளை பற்றி அறிந்து ஒரு கலந்தாய்வு செய்து அதை நம் மாநிலத்தில் எப்படி செயல்படுத்துவது என்பதை பற்றிய ஒரு ஒரு பயிற்சி பயணமாக இந்த ஸ்டார்ட் அப் டி பயணம் செல்வதாக தெரிவித்தார். அந்த மாநிலத்தில் பல்வேறு சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் எனப்படும் கூட்டமைப்பின் தொழில் யுக்திகளை தமிழகத்தில் செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.. மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்காக இன்னொரு மாநிலத்திற்கு தமிழக இளம் தொழில் முனைவோர்களை அழைத்து செல்லும் இளைஞர் நவீன் கிருஷ்ணாவின் முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவை சின்ன வேடம் பட்டி பகுதியில் உள்ள, விளையாட்டு மைதானத்தில் இன்று, முல்லை தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் 11 வயது மாணவி, மூன்று உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்,
Next post சர்வதேச யுனைடெட் கலாம் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர்….