கோவில்பட்டியில் அதிக கட்டணம் வசூலிக்கும் மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மதிமுக கோரிக்கை 

Spread the love

கோவில்பட்டியில் அதிக கட்டணம் வசூலிக்கும் மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மதிமுக கோரிக்கை

 

கோவில்பட்டி:செப்-23

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இயக்கப்பட்டு வரும் ‌பல மினி பஸ்கள் பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதிமுக நகர செயலாளர் பால்ராஜ் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியனிடம் கோரிக்கை மனு அளித்தார்.

 

அந்த மனுவில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5 வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறி இருக்கும் நிலையில் கோவில்பட்டி பகுதியில் இயக்கப்படும் மினி பஸ்களில் குறைந்தபட்ச கட்டணமே பத்து ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருவதாகவும் , இதனால் ஏழை ,எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதிக கட்டணம் வசூலிக்கும் மினிபஸ்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், மினி பஸ்களில் கட்டண விபரம் மற்றும் இயக்கப்படும் நேரம் குறித்து விவரங்களின் பட்டியலை வைக்க வலியுறுத்த வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அப்போது நகர இளைஞரணி செயலாளர் முத்துகிருஷ்ணன், நகரத் துணைச் செயலாளர் லியோ செண்பகராஜ் ,, நகர பொருளாளர் தம்பித்துரை, வார்டு செயலாளர்கள் சுந்தர்ராஜ், வேலாயுதம் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தமிழகத்தில் நிலவும் பிரச்சனையை தீர்ப்பதற்கு டெல்லி தலைவர்கள் வந்து பேசி சரி செய்ய வேண்டும்-டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி.. புதிய தமிழக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பத்திரிக்கையாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர் 2019 ஆண்டு தமிழகத்தில் அதிமுக தலைமைகளில் வலுவான கூட்டணி உருவானது, அதே போல தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்படுத்தும் வகையில் 25 ஆண்டு நிறைவு சாதனை விழா டெல்லியில் நடைபெற்றது.தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழலை எதிர்த்து அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது இரண்டு நாட்களாக கூட்டணிக்குள் இருக்கின்ற இரண்டு(பாஜக – அதிமுக)நண்பர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு வார்த்தை போர் நடைபெற்று வருகிறது.இதெல்லாம் விட்டுவிட்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.. தமிழக பட்ஜெட்டில் நிறைவேற்றப்படக்கூடிய பல திட்டங்கள் சரியான நிறைவேற்றப்படாமல் கிராமங்களில் சாலைகளை போடாவில்லை,ஒட்டுமொத்தமாக சட்டம் ஒழுங்கு சீரடைந்து சந்தி சிரிக்கும் விதமாக இருக்கிறது.மக்கள் விரோத திமுக கட்சியை அகற்ற தேசியத் ஜனநாயகக் கூட்டணி கட்சி நடைபெறும் ஒருமித்து செயல்படுகின்ற நேரம் இதுவாகும். மீண்டும் பிரதமர் மோடியை 3வது முறையாக பிரதமராக ஆக்க அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும்,தமிழகத்தில் நிலவும் பிரச்சனையை தீர்ப்பதற்கு டெல்லி தலைவர்கள் வந்து பேசி சரி செய்ய வேண்டும் அதற்கான அனைத்து முயற்சிகளும் எடுப்பேன்,பரந்த மனப்பான்மையுடன் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.
Next post வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கோரிக்கை