மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் 

Spread the love

மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் 

  கோவில்பட்டி நவ 18,மத்திய, மாநில அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். தரமான சாலை அமைத்து ஓட்டுநர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த பின், மோட்டார் வாகன சட்டத்தை திருத்த வேண்டும். ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கருதி, புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆட்டோ தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு முக்குலத்தோர் தொழிற்சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆட்டோ சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ஊட்டி குந்தா தாலுகாவில் 213 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
Next post கோவில்பட்டியில் ரூ.283.20 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.