நாட்டுக்கோழியில் கிடைக்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் பிராய்லர் கோழியில் கிடைக்கின்றது – கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் நடராஜன் பேட்டி

Spread the love

நாட்டுக்கோழியில் கிடைக்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் பிராய்லர் கோழியில் கிடைக்கின்றது – கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் நடராஜன் பேட்டி

 

கோவை அவிநாசி சாலையில் ஜென்னி கிளப் ஓட்டலில் பிராய்லர் கோழிகளில் உள்ள ஊட்டச்சத்து, தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

 

 

 

 

இந்து கருத்தரங்கில் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிராய்லர் கோழியில் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் மற்றும் நன்மைக்கும் குறைத்து எடுத்துரைத்தார்.மேலும் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் நடராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

 

 

 

 

பல்லடம் பிராய்லர் கோழி கமிட்டி, பண்ணை கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை அமைப்பின் சார்பாக நமது நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு, பிராய்லர் கோழிகளில் உள்ள ஊட்டச்சத்து, தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இங்கு நடைபெற்று வருகிறது.

பவுல்ட்ரி பார்மர்ஸ் ரெகுலேட்டரி கமிட்டி என்ற அமைப்பு கோவையில் இயங்கி வருகிறது, இந்த அமைப்பின் நோக்கம், இவர்கள் தயாரிக்கும் பிராய்லர் இறைச்சி கோழிகள் சுகாதாரமானது, இக்கோழிகளில் இருந்து நமக்கு கிடைக்கும் சத்துக்கள் பாதுகாப்பானது, மற்றும் சுகாதாரமானது, என்பதை பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இது சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னேடுத்து வருகின்றனர், இதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் மூலமாக மருத்துவ துறை சார்ந்த வல்லுநர்களை வரவழைத்து, இது ஒரு பாதுகாப்பான உணவுதான் என்பதை புரிய வைக்கும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது, மேலும் பிராய்லர் கோழிகள் நமக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகின்றது, இதில் எந்த விதமான நச்சுத்தன்மை இல்லை என்றார், மேலும் கோழிகளின் இறைச்சி மற்றும் எடையதிகரிப்புக்காக ஊசிகள் செலுத்துவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்..

இது முழுக்க முழுக்க ஒரு தவறான செய்தி ஆனால் வதந்தியாக மக்களிடையே பரவிவருகிறது, இதனை மக்கள் நம்ப வேண்டாம், நமது குழந்தைகளுக்கு அம்மை நோய், போலியோ போன்ற நோய்கள் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக தடுப்பூசிகள் செலுத்துகின்றோமோ அதே போன்று தான் இந்த வகை கோழிகளுக்கும் தடுப்பூசி மட்டுமே செலுத்துவதாக தெரிவித்தார், மேலும் நாட்டுகோழிகளில் அதிக சத்துக்களும் பிராய்லர் கோழிகள் சத்து இல்லை என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது என்ற கேள்விக்கு,…

மனிதன் உருவாக்கியது தான் இந்த

நாட்டு கோழியும் பிராய்லர் கோழியும், நாட்டு கோழியின் வளர்ச்சி நீடித்த நாட்கள் என்பதால், மனிதர்களுக்கு தேவையான அளவை நாட்டுகோழிகளால் ஈடு கொடுக்க முடியவில்லை, அதன் உற்பத்தி திறனை அதிகரிக்க செய்வது கடினமான செயல்களில் ஒன்றாக உள்ளது, நாட்டுகோழியில் கிடைக்கும், ஊட்டச்சத்துக்கும் பிராய்லர் கோழியில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கும் எந்தவிதமான வேறுபாடுகள் ஒன்றும் இல்லை, நாட்டுகோழிகள் அதிக நாட்கள் வளரகூடியவை இதனால் இதன் சுவை கூடுதலாக உள்ளது, வேறு எந்தவித சத்துக்களும் இல்லை என்றார், மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என்றார், இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது பண்ணை கோழிகள் விவசாயிகள் ஒழுங்குமுறை குழுவின்

மேலான்மை ஆலோசகர்

ராம்ஜி ராகவன், உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மனை வரன்முறை சட்டத்தை மேலும் ஆறு மாத காலம் கால நீட்டிப்பு செய்த தமிழக அரசுக்கு ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி நன்றி
Next post தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றுதல் வழங்கும் விழா நேர்டு தொண்டு நிறுவனத்தின் தலைவர் காமராஜ் தலைமையில் நடந்தது