சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது. 

Spread the love

சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது.

 

கோவை நவம்பர் 29-

 

 

 

குப்பேபாளையத்தில், சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷ.ன் எல்லைக்குட்பட்ட குப்பேபாளையத்தில் உள்ள தனியார் தோட்டத்தில், பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

 

 

எஸ்.ஐ., அருள்பிரகாஷ் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது.

 

 

 

 

சேவல் சண்டையில் ஈடுபட்ட, சூலூரை சேர்ந்த மனோஜ் குமார், 27, வெள்ளிமலைபட்டிணத்தை சேர்ந்த குழந்தைவேல், 34, கெம்பனூரை சேர்ந்த மதிஸ், 18 ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள், இரண்டு சேவல் மற்றும் 900 ரூபாய் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

 

 

தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய புள்ளாகவுண்டன்புதூரை சேர்ந்த கார்த்திக்கை, போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தனியார் நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்.
Next post *குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின்  முதல் பட்டமளிப்பு விழா*