அந்தமான் கடல் பகுதியில் டிசம்பர் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி. தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

Spread the love

அந்தமான் கடல் பகுதியில் டிசம்பர் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி. தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

 

 

கோவை நவம்பர் 30-

 

 

 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, காரைக் கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும். 2, 3ம் தேதியில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யும். 4ம் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

 

 

 

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். இந்தநிலையில் வருகிற 5ம் தேதி வாக்கில் அந்தமான் கடல்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஊத்து-9 செ.மீ, ஸ்ரீவில்லி புத்தூர்-7செ.மீ மழை பெய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ஜல்லிக்கட்டு போட்டியில் விதிமீறல்கள் நடைபெறவில்லை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து.
Next post ஆன்லைன் மூலம் கார் வாடகைக்கு விற்பனை. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர் கைது.