கோவை அருகே ரேஷன் கடை பெண் ஊழியரை பாட்டுப் பாடி கிண்டல் செய்தவர் கைது.

Spread the love

கோவை அருகே ரேஷன் கடை பெண் ஊழியரை பாட்டுப் பாடி கிண்டல் செய்தவர் கைது.

 

 

கோவை டிசம்பர் 1-

 

 

ரேஷன் கடை பெண் ஊழியரை பாட்டு பாடி கிண்டல் செய்தவர் கைது செய்யப்பட்டார்.குமாரபாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி, 37. இவர் குமாரபாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் சில மாதங்களுக்கு முன்பு தற்காலிக ஊழியராக பணியாற்றினார்.

 

 

 

அங்கு பணிபுரிந்து வந்த, 42 வயது பெண் ஊழியர் பின்னர் வேறு ஊருக்கு மாற்றலாகி சென்று விட்டார்.இந்நிலையில் நேற்று மதியம் அன்னுாரில் கூட்டுறவு பண்டக சாலைக்கு வந்த ரேஷன் கடை

 

 

 

பெண் ஊழியரிடம், குமாரசாமி சினிமா பாட்டு பாடி, ஆபாசமாக பேசி தகராறு செய்துள்ளார். இதுகுறித்த புகாரில், அன்னுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமாரசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கஞ்சா வியாபாரியின் வங்கி கணக்குகள் முடக்கம் போலீசார் நடவடிக்கை.
Next post கோவை மேட்டுப்பாளையத்திற்கு இடையே இனி 7 நாட்களும் ரயில் சேவை.