தம்பியை குத்தி கொலை செய்த அண்ணன் கைது.

Spread the love

தம்பியை குத்தி கொலை செய்த அண்ணன் கைது.

 

கோவை டிசம்பர் 2-

 

 

 

கோவை அருகே தகராறில் தம்பியை குத்தி கொலை செய்த அண்ணன் கைது.

 

 

 

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கொள்ளுபாளையம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் மணிகண்டன் 29. இவரது தம்பி தேவராஜ் 25.இருவரும் குடும்பத்துடன், கேரள மாநிலம், பாலக்காடு சந்திரநகரில் தங்கி வந்தனர்.

 

 

 

பைக்கில் மசாலா துாள், சாக்லேட் விற்பனை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு, அண்ணன் – தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தேவராஜை கத்தியால் கழுத்தில் குத்தினார்.

 

 

 

பின், பைக்கில் தப்பிச் சென்றார். படுகாயம் அடைந்த தேவராஜ், பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். பாலக்காடு போலீசார் தனிப்படை அமைத்து, மணிகண்டனை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார கலைத் திருவிழா போட்டிகள் கோலாகலம்,
Next post நெகமம் பகுதியில் நாளை 3- ம் தேதி மின் தடை மின்வாரியம் அறிவிப்பு,