பிரீத்தி மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடலில்  எலும்பு முறிவு சிகிச்சைக்கு வயதானவர்களுக்கு தனிப்பிரிவு –  டாக்டர் தண்டபாணி தகவல் 

Spread the love
பிரீத்தி மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடலில்  எலும்பு முறிவு சிகிச்சைக்கு வயதானவர்களுக்கு தனிப்பிரிவு –  டாக்டர் தண்டபாணி தகவல்
கோவை ஜன 3,
 கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள   பிரீத்தி மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் எலும்பு தொடர்பான ஆர்த்தோ மற்றும் பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது..பல்வேறு சவாலான நோய்களுக்கு குறிப்பாக வயதானவர்களுக்கு ஏற்படும் இடுப்பு எலும்பு மற்றும் மூட்டு தொடர்பான சிகிச்சையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சை எடுத்துசெல்கின்றனர்..இந்நிலையில்,பாராதைராய்டு  தொடர்பான   அரிய வகை நோய் பாதித்த நோயாளி ஒருவருக்கு சிகிச்சை வழங்கியது தொடர்பாக, மருத்துவமனையின் இயக்குனரும், எலும்பு முறிவு மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தண்டபாணி செய்தியாளர்களிடம்  பேசினார்.. அப்போது பேசிய அவர், இலட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும்,இந்த நோய் பாதித்த கோபியை சேர்ந்த பெண் ஒருவர் இரண்டு கால் எலும்புகளும் பலவீனமடைந்து நடக்க முடியாமல் இருந்த நிலையில் அவரை பரிசோதித்த போது பாராதைராய்டு சுரப்பதை  கண்டதாக கூறிய அவர்,உடனடியாக அவருக்கு எலும்பு அறுவை சிகிச்சையுடன் சேர்த்து,பாராதைராய்டு கட்டியை கழுத்தில் இருந்து நீக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிவித்தார்..தற்போது அவர் நன்றாக இருப்பதாகவும்,யாருடைய உதவியும் இன்றி நடப்பதாக அவர் கூறினார்..தொடர்ந்து பேசிய அவர்,எலும்பு முறிவு தொடர்பான சிகிச்சையில்  பல்வேறு விதமான நவீன சிகிச்சை முறையில் அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் குறிப்பாக வயதானவர்களுக்கு ஏற்படும் இடுப்பு எலும்பு முறிவு,மூட்டு தொடர்பான சிகிச்சைகளை  நவீன முறையில் வழங்க தனிப்பிரிவு மருத்துவமனையில் இருப்பதாக அவர் கூறினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post வாசம் பில்டர்ஸ் 10 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மகளிர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி தலைவர் கோமளவல்லி துவக்கி வைத்தார்
Next post வாணியம்பாடியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டு வந்தவர் கைது.