தினமலர் நாளிதழை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட சிறுப்பான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 

Spread the love

தினமலர் நாளிதழை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட சிறுப்பான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 

தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் ஏழை குழந்தைகளுக்கு கொண்டுவந்த காலை சிற்றுண்டி திட்டத்தை அவதூறாக பதிவிட்ட தினமலர் நாளிதழை கண்டித்து கோவை செல்வபுரம் சிவாலயா தியேட்டர் அருகில் கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாவட்டத் தலைவர் ஆரோக்கிய ஜான், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் நாளிதழின் நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் நாளிதழை தீயிட்டு கொளுத்தி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர் ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட அமைப்பாளர் உசேன், துணைத் தலைவர் அலெக்சாண்டர் ,துணை அமைப்பாளர் பிரான்சிஸ், சிக்கந்தர், முபாரக் அலி, அயூப், ஜாகிர் உசேன், செல்வபுரம் பகுதி செயலாளர் கேபிள் மணி, மற்றும் கரும்புக்கடை பகுதி செயலாளர் ஜலாலுதீன், கோவை மாநகராட்சி 79வது வார்டு உறுப்பினர் வசந்தாமணி பழனிச்சாமி, 76 வது வார்டு உறுப்பினர் ராஜ்குமார், 79வது வட்டக் கழக செயலாளர் இப்ராகிம், 86வது வட்டக் கழக செயலாளர் குத்புதீன் ,மற்றும் 76,78,79வது வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post செஞ்சுரி மேட்ரசஸ் நிறுவனத்தின் பிராண்ட் தூதராக பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து நியமித்துள்ளது
Next post மொழிப்போர் தியாகி மு.மா.சண்முகசுந்தரம் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி