நீலகிரி மாவட்டத்தில் சாக்லேட் திருவிழா தொடங்கியது

Spread the love

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு, சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்தில் சாக்லேட் திருவிழா தொடங்கியது.

நீலகிரி டிச 25,

“கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களின் ஒற்றுமையை பறைசாற்றும் சாக்லேட் திருவிழா தற்போது நீலகிரி மாவட்டத்தில் துவக்கியது.

நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஊட்டி வா்க்கி, யூகலிப்டஸ் தைலம் பிரபலமானவை. அதுபோல நூற்றாண்டுகளுக்கு மேலாக உதகையில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் உலக பிரசித்தி பெற்றது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஹோம் மேட் சாக்லேட்டை விரும்பி வாங்கி செல்வது வழக்கம். இந்த ஹோம் மேட் சாக்லேட்டுகள் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நீலகிரி போன்ற குளிா்ந்த பகுதியில் மட்டுமே தயாரிக்கப்படும் இந்த வகை ஹோம் மேட் சாக்லேட்டுகள் சீசன் அல்லாத காலத்தில் மாதம் ஒரு லட்சம் கிலோவும், சீசன் காலத்தில் 5 லட்சம் கிலோ வரையும் விற்பனையாகின்றன. கால் கிலோ சாக்லேட் ரூ.120 முதல் ரூ. 400 வரையும், பிரத்யேகமாக தயாரிக்கப்படும் சாக்லேட்டுகள் கிலோ ரூ.2500 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் விற்கப்படுகின்றன. ஹோம் சாக்லேட் தயாரிப்பில் ஏராளமானோா் ஈடுபட்டு வருகின்றனா்.

 

இந்நிலையில், 28 மாநிலங்களில் சிறப்பாக விளைவிக்கப்படும் பொருள்களைக் கொண்டு ஹோம் மேட் சாக்லெட் தயாரித்துள்ள உதகையைச் சோ்ந்த பஸ்ருல் ரஹ்மான் கூறியதாவது:

 

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக, அந்தந்த மாநிலத்தில் விளையும் சிறப்பான விளைபொருள்களைக் கொண்டு சிறப்பு ஹோம் மேட் சாக்லேட் தயாரித்துள்ளோம். மேலும், பெண்கள் கழுத்தில் அணியும் டாலா்கள், கம்மல்களில் சாக்லெட் பொருள்கள் இடம் பெற்றிருப்பது புத்தாண்டுக்கு புது வரவாக உள்ளது. நீலகிரியின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் ஹோம் மேட் சாக்லேட்டுகளில் ஒவ்வோா் ஆண்டும் பல புதுமைகளைப் புகுத்தி வருவதால், இதற்கான கிராக்கி இன்னும் குறையாமல் உள்ளது என்றாா்.

சுவையும், தரமும் மாறாமல் தயாரிக்கப்படுவதால் நீலகிரி ஹோம் மேட் சாக்லேட் சந்தைகளில் நிலைத்து நிற்பதுடன் இந்தத் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது என இத்தொழிலில் ஈடுபடுபவா்கள் தெரிவிக்கின்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post நீலகிரி மாவட்டத்தில் உறை பனி காரணமாக கடும் குளிர் – பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
Next post கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பிரபல நாளிதழை கண்டித்து ஆர்ப்பாட்டம்