திருப்பத்தூர் அருகே கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் முன் காப்போம் “சிறப்பு மருத்துவ முகாம்”நடைபெற்றது

Spread the love

திருப்பத்தூர் அருகே கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் முன் காப்போம் “சிறப்பு மருத்துவ முகாம்”நடைபெற்றது

 

திருப்பத்தூர் ஆக் 26,

திருப்பத்தூர் அடுத்து உள்ள  தாதன வலசை கிராமத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு “சிறப்பு மருத்துவ முகாம்” திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தலைமையில் நடந்தது.இந்த முகாமிற்கு  திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.இதனை தொடர்ந்து மருத்துவ முகாமில் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவம், பல் பிரிவு, காது மூக்கு தொண்டை மருத்துவம், குழந்தைகள் நலம் மகப்பேறு பரிசோதனை, தோல் நோய் ,காச நோய்   உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு உண்டான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்தத்தில் கொழுப்பின் அளவு கண்டறிதல், இருதய நோய் உள்ளிட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த மருத்துவ முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திருப்பத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார்,ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post “உத்யோக் உத்சவ் 2023” நிகழ்ச்சியை கோவை மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்
Next post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடன் வழங்கும் முகாம் திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் நடந்து