காந்திஜெயந்தி தினத்தன்று மதுவிற்பதாக பல்வேறு புகார் 5 பேர் கைது

Spread the love

அரியலூர் அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் காந்திஜெயந்தி தினத்தன்று மதுவிற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது தா.பழூர் அருகே உள்ள சோழங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த சின்னதுரை (வயது52) என்பவர் மதுபாட்டில்களை பதுங்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதுபோல் தா.பழூர் காலனி தெருவை சேர்ந்த செல்வம் (48), அதே பகுதியை சேர்ந்த முத்து (53), தா.பழூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரஸ்வதி (48), அதே பகுதியை சேர்ந்த செல்வி (45) ஆகியோர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.”

https://www.maalaimalar.com/news/district/ariyalur-news-5-people-arrested-for-selling-liquor-519929?infinitescroll=1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மாணவ,மாணவிகளுக்கு தனித்திறன் மேம்பாட்டு போட்டி
Next post கருணை அடிப்படையில் பணி வழங்குவது உரிமை அல்ல -உச்சநீதி மன்றம் தீர்ப்பு