பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்குமா?வேலூர் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் கேள்வி?

Spread the love

பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்குமா?வேலூர் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் கேள்வி?
வேலூர் மாநகரம் 28-வது வார்டு காகிதப் பட்டறை ஐடா ஸ்கடர்டு ஆற்காடு ரோட்டில் கால்வாயில் ஆக்கிரமித்துள்ள முள்புதர்கள் பிளாஸ்டிக் கழிவுகளால், நிறைந்து காணப்படுகின்றது.இதனால் மழைக்காலங்களில் மலையிலிருந்து வரும் தண்ணீர் செல்ல வழியில்லாமல் கழிவு நீருடன் தேங்கி நிற்பதாகவும், இதனால் முள்புதர்கள் பகுதியிலிருந்து கால்வாய் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் விஷ பூச்சிகள் மற்றும் பாம்புகள் சென்று விடுகிறது.அதனால் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் காணப்படுகிறார்கள்* அது மட்டுமின்றி இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிக்கன் கழுகுகளை மூட்டை மூட்டையாக கொட்டி செல்கின்றனர் இதனுடன் பிளாஸ்டிக் கழிவுகள், சாக்கடைகள் கழுவினார்கள் தேங்கி நிற்பதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது ஆகையால் சிஎம்சி ஆற்காடு சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு மற்றும் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் *குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் டெங்கு, மலேரியா* நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளதால் உயர்திரு.*வேலூர் மாநகராட்சி ஆணையாளர்.* அவர்கள் நேரில் பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்வாய் நீர் சுத்தம் செய்து தரும்படி காகிதப்பட்டறை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மற்றும் பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சிதம்பரம் அரசினர் காமராஜர் மருத்துவமனையில் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு.
Next post ஊருக்கு போவதாக பொய் சொல்லிவிட்டு காதலனை கரம் பிடித்த நர்சு.