புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு பணியில் முதல் கட்டமாக செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு

Spread the love

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு பணியில் முதல் கட்டமாக செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு

 

புதுக்கோட்டை,மே. 27:

 

பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு பணியில் முதல் கட்டமா க செங்கல் கட்டுமானம் வெளிப்பட்ட நிலையில் தொல்லியல் ஆய்வுக்கழகம் மகிழ்ச்சி அடைந்தது.

 

புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை சங்ககால கோட்டை என்பதற்கான ஆதாரங்களை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகம் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தது.

 

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு இராஜேந்திரன் பொற்பனைக்கோ ட்டையில் அகழ்வாய்வு நடத்த வேண்டுமென வழக்கு தொடு த்திருந்தார்.

 

இந்த வழக்கினை வழக்கறிஞர் கணபதி சுப்ரமணியம் செ ன்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் நடத்தி நீதியர சர் கிருபாகரன் அடங்கிய இரு நபர் நீதிபதிகள் அமர்வில் வி சாரணை முடிவில் பொற்பனைக்கோட்டையில் அகழ்வாய்வு செய்ய உத்தரவிட்டனர்.

 

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை க்கழக பேராசிரியர் இ.இனியன் முதல் கட்ட அகழ்வாய்வை நடத்தினார். இதனைத்தொடர்ந்து விரிவான அளவில் ஆய்வு களை மேற்கொள்ளும் வகையில் சில நாட்களுக்கு முன்பு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொற்ப னைக்கோட்டை அகழ்வாய்வை தொடங்கி வைத்தார்.

 

அகழ்வாய்வு இயக்குநராக தொல்லியல் அலுவலர் தங்கது ரை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செங்கல் கட்டுமா னம் வெளிப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் தங்கம் தென்ன ரசு தனது அலுவலக முகநூல் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள் ளார்.

 

அதில் புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக் கோட்டையில் தமிழ் நாடு அரசின் தொல்லியல்துறை வாயிலாக அண்மை யில் தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 07 முதல் 19 செ.மீ ஆழத்தில் செங்கல் கட்டுமானம் வெளிக்கொணரபட்டுள்ள தாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பொற்பனைக்கோட்டையின் அரண்மனை மேட்டுப்பகுதியில் ஏற்கனவே ஆம்போரா அடிப்பாகம்,கூரை ஓடுகள்,பல்வேறு வகையிலான மணிகள் அடையாளப்படுத்தப்பட்டிருந்த நி லையில்,தற்போது செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டு இரு ப்பதாக தொல்லியல் துறை அமைச்சர் தகவல் தெரிவித்தி ருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாகும்.

 

மேலும் ஆய்வு தொடரும்போது தமிழகத்திற்கும், இந்திய வரலாற்றுக்கும் , புதிய வெளிச்சத்தை இந்த அகழ்வாய்வு தரும் என நிறுவனர்,மணிகண்டன், தலைவர் கரு.ராஜேந்தி ரன் ஆகியோ

ர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ஜோலார் பேட்டையில் தமிழக அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார்.
Next post தாராபுரத்தில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்த வேண்டி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்