ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தன் அம்மாவின் நினைவாக அரசு பள்ளிக்கு கம்யூட்டர் வழங்கிய திமுக கவுன்சிலர் 

Spread the love

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தன் அம்மாவின் நினைவாக அரசு பள்ளிக்கு கம்யூட்டர் வழங்கிய திமுக கவுன்சிலர்

 

தாராபுரம் செப் 6,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி 3வது வார்டு திமுக கவுன்சிலர் ஹைடெக் அன்பழகன் வெற்றி பெற்ற நாள் முதல் தன் பகுதி மக்களுக்கும் பிறருக்கும் உதவி வருகிறார் தமிழக முதலமைச்சரும் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க இல்லம் தேடி கல்வி மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள் அதன் வழியில் தொடர்ந்த தன் தாய் தந்தை முத்துச்சாமி-பானுமதி ஆசிரியர்களாக பணி செய்து கல்வியின் முக்கியத்துவத்தை கொடுத்து இந்த அளவுக்கு வளர்ச்சி நிலையில் இருக்கிறேன் அதுபோல் பிறரும் கல்வியில் முன்னேற வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் கரங்களால் திறந்து வைக்கப்பட்ட தாராபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது அதே பள்ளியில் பல வருடங்களாக தலைமை ஆசிரியராக பணி புரிந்த பானுமதி முத்துச்சாமி பணி ஓய்வு பெற்ற பின் அவர்கள் நினைவாக பள்ளிக்கு பல உதவிகள் செய்து வந்தார் ஹைடெக் அன்பழகன் அதன் தொடர்ச்சியாக மாணவ மாணவிகள் நாகரீக அறிவியல் வளர்ச்சி மாற்றங்களை உலக மக்களுக்கு ஏற்றவாறு தங்கள் கல்வி அறிவை பயில பண்பாளர் ஹைடெக் அன்பழகன் தன் தாயார் பணிபுரிந்த பள்ளிக்கு ஆசிரியர்கள் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய கம்ப்யூட்டர்வழங்கினார் பின்பு அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறியும் தங்கள் அம்மா பணிபுரிந்த நினைவுகளை எடுத்துக் கூறி மாணவர்களை வாழ்த்தினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post அயோத்தி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோவை மாநகர் காவல் ஆணையரிடம் தபெதிக பொது செயலாளர் இராமகிருஷ்ணன் தலைமையில் மனு
Next post ஒரு மாத காலத்தில் டாஸ்மாக் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்-மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி