கூடைப்பந்து விளையாட்டு போட்டிகளில் தாராபுரம் அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேம்பியன் பட்டம் வென்றது.

Spread the love

தாராபுரம் குறுமய்ய பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து விளையாட்டு போட்டிகளில் தாராபுரம் அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேம்பியன் பட்டம் வென்றது.

தாராபுரம் ஆக் 30,

பள்ளிகளுக்கு இடையேயான குறுமய்ய விளையாட்டுப் போட்டியை தாராபுரம் சி.எஸ்.ஐ. பள்ளி தலைமை ஏற்று நடத்தியது இதில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டிகள் தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இதில் தாராபுரம் அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இளையோர் மற்றும் மூத்தோர், மிக மூத்தோர், மூன்று பிரிவுகளிலும் வென்று சாம்பியன் பட்டம் வென்றனர் ஆண்கள் இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவில் தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சேம்பியன் பட்டம் வென்றார்கள். இந்தப் போட்டியில் அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி லஷீரா சிறந்த விளையாட்டு வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆடவர் பிரிவில் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முகமது ஜுபைர் என்ற மாணவன் சிறந்த விளையாட்டு வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post புதுக்கோட்டை அருகே கணவன் மனைவி கருத்து வேறுபாட்டின் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை.
Next post அதுல்யா சீனியர் கேர் மையத்தை கோவை மாநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்